SDPI கட்சி நடத்தும் மாநாடு எதிர்வரும் (21/10/18) ஞாயிற்றுகிழமை அன்று திருச்சி மாநகரில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இம்மாநாட்டில் கலந்துகொள்ளுவதற்கு SDPI கட்சி சார்பாக மாவட்ட வாரியாக மாவட்ட தலைவர்கள் உறுப்பினர்கள் அழைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியிலும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு நேரில் சென்று நடக்க இருக்கும் மாநாட்டிற்கான அழைப்பினை தீவிரமாக செய்துவருகின்றனர்.
இதில் திமுக நகர செயலாளர்.குணசேகரன், அதிமுக நகர செயலாளர்.பிச்சை, தமுமுக.செய்யது மற்றும் ஊரில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு நேரில் சென்று தற்பொழுது அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்க்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்.இழியஸ், பாப்புலர் ப்ராண்ட் அப் இந்தியவுடைய மாவட்ட தலைவர்.ஹாஜா, வக்கீல் நிஜம் மற்றும் நிர்வாகிகள் நேரில் சேன்று தொப்புள்குடி உறவுகளுக்கு அழைப்பு விடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.