Friday, April 26, 2024

அதிரையில் ஆரம்பமானது புஹாரி ஷரீஃப்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் 75 வருடங்களுக்கு மேலாக ஓதப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு இன்று மீண்டும் ஆரம்பம் செய்யப்பட்டது.

முன்னதாக காலை 6 மணிக்கு திக்ர் மஜ்லிஸ் துவங்கி, அதிரை மட்டுமல்லாது வெளி ஊரிலிருந்து வந்த உலமாக்கள் புஹாரி ஷரீஃப் ஓதினர். பின்னர் 7.40 மணிக்கு அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

இதனையடுத்து ஊரின் நலனுக்காகவும், அனைத்து முஸ்லிம்களின் நல்வாழ்வுக்காகவும் (பிரார்த்தனை) துஆ செய்யப்பட்டது.

75 வருடத்திற்கும் முன்னதாக அதிரையில் காலரா எனும் பெரும் நோயால் அதிரையர்கள் அவதிப்பட்டு நாளுக்கு நாள் உயிர் பலி ஆகி கொண்டிருந்த சூழலில், ஷைகுனா ஆலிம் அவர்களின் வழிகாட்டலின் படி 40 நாட்கள் தொடர்ந்து புஹாரி ஷரீஃப் ஓதுவது என தீர்மானிக்கப்பட்டு தொடர்ந்து ஓதப்பட்டு வந்ததன் விளைவாக இந்த தலைமுறை வரை காலரா நோய் இதுவரையிலும் அதிரையில் எட்டிப்பார்க்கவில்லை எனலாம்.

இன்று துவங்கய புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் ல் சுமார் 2,500 க்கும் மேறபட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...