ஏரிப்புரக்கரை கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியான பிலால் நகரில் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது.
இதற்கு அப்பகுதியில் இணைப்புகளுக்கு ஏற்ற மின் மாற்றிகள் இல்லாததை சுட்டிகாட்டி 1வது வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் கமால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்ததனர்.
அதனடிப்படையில் ஊராட்சி சார்பில் மின் வாரியத்திற்கு மனு அளித்தனர் அம்மனு மீதான நவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என 1 வது வார்டு உறுப்பினர் ஜாஸ்மின் கமாலுதீன் அதிராம்பட்டினம் மின் வாரிய பொறியாளர் சர்மா அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்,அதில் பிலால் நகர் மக்களின் கோரிக்கையான போதிய திறன் கொண்ட மின் மாற்றியை உடனே அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை பெற்று கொண்ட மின்வாரிய பொறியாளர் சர்மா இது குறித்து உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.