அதிரை AFCC கிரிக்கெட் அணியின் சார்பாக இன்று (19.04.2022) செவ்வாய்க்கிழமை கிராணி AFCC மைதானம் பின்பிறம் உள்ள மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளிவாசல் அருகில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்சிக்கு அதிரையில் உள்ள பல அணிகளும், மாற்றுமத நண்பர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.
மாநில அளவில் பங்கு பெற்று விளையாடிய தலைசிறந்த அணிகள் எதிர்வரும் மே மாதம் 11.05.2022 அன்று அதிரை AFCC நடத்த இருக்கின்ற கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.