அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.
இதுதவிர சுயேட்சைகளும் பெருமளவில் போட்டியிடுவதால் அதிரை தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் அப்துல் ரஹமான் சுயேட்சை சின்னத்தில் 7வார்டில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கிறார்.
தாம் வெற்றிப்பெற்று தாம் சார்ந்துள்ள 7வது வார்டு மேம்பாட்டிற்கு முழு கவனம்.செலுத்த உள்ளதாகவும்,வார்டு மேம்பாட்டு நிதியை ஒரு ரூபாய் கூட ஊழலற்ற முறையில் செலவு செய்ய உள்ளதாக தெரிவிக்கிறார்.
இது தவிர வார்டுக்குட்பட்ட சாலைகளை செப்பனிட போர்கால நடவடிக்கைகள் எடுப்பதோடு, பழைய சாலைகளை தூர்வாரிய பின்னரே புதிய சாலைகளை அமைக்க போராடுவேன் என தெரிவித்துள்ளார்.
இதனால் சாலைகள் உயர்ந்து வீடுகள் பள்ளத்தாக்காக மாறும் நிலை முற்றிலும் தவிர்க்கப்படும் என்றார்.
விரைவில் சின்னம் ஒதுக்கப்பட உள்ளதாகவும், தமக்கு அளிக்க கூடிய சின்னத்தில் வாக்கு செலுத்தி வாய்ப்பு தாருங்கள் என கேட்டு கொண்டுள்ளார்.