மரண அறிவிப்பு : புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜா முகைதீன், மர்ஹூம் அஹமது ஹாஜா ஆகியோரின் மருமகனும், தீன் முஹம்மது, நெய்னாமலை(கானாமூனா) ஆகியோரின் சகலையும், நஜ்புதீன், நாசர் ஆகியோரின் மச்சானும், அன்வர் அலி, அப்துல் முனாஃப், அப்துல் ரஹ்மான், ஹாஷிம், முஹம்மது பாசின் ஆகியோரின் அப்பாவும், S.M.A. சாகுல் ஹமீது, S.M.A. முகமது அப்துல் காதர்(செல்லாப்பா), S.M.A. ஹாஜா சரீபு, S.M.A. ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய S.M. அக்பர் ஹாஜியார் அவர்கள் இன்று மாலை 3.30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.