Friday, May 3, 2024

காட்பாடி, கும்பகோணம் நபர்களுக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது, தமிழகத்தின் மேலும் இருவருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 40 ஆக உயர்ந்திருக்கிறது. இரண்டு நபர்கள் தற்போது புதிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை, தமிழகத்திற்கான தேசிய சுகாதார மிஷன் உறுதி செய்துள்ளது.

அதில் ஒருவர் 42 வயதானவர். கும்பகோணத்தைச் சேர்ந்த அவர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று ஊர் திரும்பிய நிலையில், அவருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டது.

மற்றொருவர், 49 வயதானவர். காட்பாடியில் சேர்ந்த அவர், வேலூரிலுள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுவிட்டு, மத்திய கிழக்கு நாடுகள் வழியே, காட்பாடி திரும்பியுள்ளார். இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சென்னையில் மட்டும் ஏற்கனவே 24,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படு வருகிறார்கள். இதில், ரத்த மாதிரிகள் சோதனைக்கு பிறகுதான், அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...