அதிராம்பட்டினம் ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மரைக்கா. கே இதிரீஸ் அஹமது தெரிவித்ததாவது, உலகையே உலுக்கி கொண்டுள்ள கொரோனா நோயால் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் அறிவித்த 1000ரூபாய் பணம் மற்றும் இதர பொருட்கள் வழங்கும் நிகழ்வு வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற உள்ளன.
கொரோனா தொற்று காரணமாக கூட்டம் சேருவதை கட்டுபடுத்தவும், கொரோனா குறித்த அறிவுரை வழங்கவும் இந்த தன்னார்வலர்கள் செயல்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அது குறித்த விளக்கம் அளிக்கவும், தயார்படுத்தபட்டு உள்ளதாக மரைக்கா கே இதிரீஸ் அஹமது தெரிவித்தார்.