உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் 9000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு என முதல்வர் அறிவித்துள்ளார்.
மார்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை 9.55 லட்சம் பேர் எழுதுவதாக இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.
11 ஆம் வகுப்புக்கு இன்னும் இரு தேர்வுகளும், 12 ஆம் வகுப்புகளுக்கு இன்னு்ம ஒரு தேர்வும் இருப்பதால் அந்த வகுப்புகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகு தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளார். அதற்கான கால அட்டவணையும் பிறகு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.