சைனாவில் கொரோனா வைரசால் இதுவரை ஆயிரக்கணக்கான மனிதர்கள் இறந்து உள்ளனர். மேலும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழக முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டு இருக்கிறது.
ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள மக்கள் அதிகமாக வெளிநாடு பயணம் செய்து வருபவர்கள். பேரூராட்சி நிர்வாகமானது இதுவைரயும் எந்த ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று சமூக அர்வளர்கள் வர்த்தகம் தெரிவிக்கின்றன.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துத்துவது புகைமருத்து அடிப்பது மற்றும் தேக்கி இருக்கும் சாக்கடை சுத்தம் செய்வது அசுத்தமாக இருக்கும் இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் போடவது இதனை போன்று முன் எச்சரிக்கை செய்து வந்தால் கொரோனா வைரஸ் வர விடாமல் தடுக்கலாம். ஆனால் அதிரை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளோ இதுவரை எந்த ஒரு முன் எச்சரிக்கையும் செய்யவில்லை என்று ஊர் பொது மக்கள் வர்த்தக நிறுவனங்கள் கவலையோடு தெரிவிக்கின்றன.