இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான BSNLஐ தனியாரிடம் தாரை வார்க்க மத்திய பாஜக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே கடந்த ஓராண்டாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், 78ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்று சென்றுள்ளது BSNL சேவையை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளன.
இதுநாள் வரை சேவைக்கான கட்டணத்தை காசோலையாக அதிராம்பட்டினம் அலுவலகத்தில் வழங்கலாம் ஆனால் ஆட்குறைவு காரணமாக காசோலை கட்டணத்தை பட்டுக்கோட்டை அலுவலகத்தில் மட்டுமே வழங்கிட வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ப்ராட் பேண்டு நுகர்வோர்கள் கட்டணம் செலுத்துவதற்கு பட்டுக்கோட்டை அலுவலகத்தை நாட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
மேலும் பழுது நீக்க பல நாட்கள் வரை இழுத்தடிப்பதால் தனியார் தொலை தொடர்பு சேவைக்கு நுகர்வோர்கள் தாவி வருகிறார்கள்.