அதிராம்பட்டினத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் சாலையமைக்கும் பணியை ஒப்பந்ததாரர்கள் மூலம் பேரூராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வந்தன.
இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவு செய்து சாலையமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனால் சில பிரச்சனைகள் எழுந்ததாக தெரிகிறது.
பணியை ஒப்பந்ததாரர் பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரைகுறையாக கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் சரிவர பதிக்கப்படாமல் பெயர்ந்த நிலையில் உள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் முதியவர்கள், சிறார்கள் குழந்தைகள் மூச்சு திணறல் நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிரை பேரூராட்சி அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு அரைகுறை சாலையாக விடபட்டுள்ள சாலைகளை முழுமைபடுத்திட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.