குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதைத்தொடர்ந்து பல மாவட்டங்களில் மனித சங்கலி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் , செந்தலைப்பட்டினம் , மீமிசல், மதுக்கூர், செந்தலை பட்டினம், குடியுரிமை சட்டம் எதிராகவும் மக்கள் பதிவேடு எதிராகவும் இன்று வியாழக்கிழமை (30/01/2020) மாலை மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆங்காங்கே பகுதியில் 8500க்கு மேற்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
மேலும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.