Friday, May 3, 2024

விநாயகர் ஊர்வலம் எதிரொலி – உச்சக்கட்ட பாதுகாப்பில் முத்துப்பேட்டை !

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று 6ம் தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.

மதியம் இரண்டு மணியளவில் ஜாம்புவானோடை சிவன் கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக செம்படவன்காடு சென்று பாமினி ஆற்றில் மாலை 6 மணியளவில் கரைக்கப்பட உள்ளது.

முத்துப்பேட்டை பதற்றம் நிறைந்த பகுதி என்பதாலும், அசம்பாவிதம் ஏற்பட வாய்பிருப்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 4,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையில், திருவாரூர் மாவட்ட எஸ்பி துரை, டிஎஸ்பி இனிகோ திவ்யன், ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிரடிப்படையினர், அதிவிரைவுப்படையினர் உள்பட 4,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆங்காங்கே தற்காலிக சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டு நகர் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...