பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான இன்று (பிப்ரவரி 17) தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள்,விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பேரணிகள்,பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் ஐந்து இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நகர தலைவர் முகம்மது புஹாரி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர்:
A.ஹாஜா அலாவுதீன் M.sc.,(chem) அவர்கள்
கலந்து கொண்டு
கொடியை ஏற்றி சிறப்பித்தார்
அதற்கு முன்னதாக தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த CRPF துணை இராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் பிலால் நகர் பகுதியில் யூனிட் தலைவர் ஜாவித் அவர்களும், காலேஜ் அருகில் unit தலைவர் அஹமதுசலீம் அவர்களும், மேலும் போஸ்ட் ஆபீஸ் பகுதியில் நகரச் செயலாளர் அபூபக்கர் அவர்களும், செக்கடிமேடு பகுதியில் நகர தலைவர் முகம்மது புகாரி ஆகியோர் கொடியேற்றினர்.
இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல் வீரர்கள்,ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.