Saturday, May 4, 2024

அதிரை,மல்லிப்பட்டிணத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள் கவனத்தில் கொள்வாரா மாவட்ட ஆட்சியர்..!

Share post:

Date:

- Advertisement -

கடந்த மாதம் 16ம் தேதி அதிகாலையில் தமிழக டெல்டா மாவட்டங்களை கஜா என்னும் புயல் புரட்டிப்போட்டு விட்டுச் சென்றது. இன்னமும் கூட மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படியிருக்கையில் அரசு நிவராண பொருட்கள் அறிவிப்பானை வெளியிட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை.

மேலும் அதிரை மற்றும் மல்லிப்பட்டிணம் பகுதிகளில் இடைக்கால நிவாரணம், குடியிருப்பு சீரமைப்பு,படகுகளுக்கு இழப்பீடு,விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் ஏதும் வழங்கிடாமல் அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்கை காட்டி வருகின்றனர்.

அதேப்போல் மல்லிப்பட்டிணம்,அதிராம்பட்டினம் பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.மற்ற பெரும்பாலான பகுதியை பார்வையிடாமல் அதிகாரிகள் புறக்கணித்து சென்றுவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும் தன்னார்வ அமைப்புகளும்,இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் தான் தொடர்ந்து நிவாரண பொருட்கள் போன்றவை வழங்கி வருவதாகவும் கூறினர்.

ஆகவே தஞ்சை மாவட்ட ஆட்சியர் இதனை கருத்தில் கொண்டு அரசு அறிவித்த நிவாரண பொருட்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...