கோட்டைப்பட்டினத்தில் கால்பந்து தொடர் போட்டி கடந்த (18/10/2018) வியாழக்கிழமை அன்று தொடங்கியது.
இத்தொடர் போட்டியில் பல்வேறு அணிகள் சிறப்பாக விளையாடினர்.
அதைபோன்று முதல் ஆட்டமாக திருச்சி அணிக்கு எதிர் அணியாக அதிராம்பட்டினம் வெஸ்டன் புட்பால் கிளப் அணியினர் நேற்றைய தினம் மோதினர்.
இப்போட்டியில் முதல் சுற்றில் இரு அணியினரும் பூஜியம் கோல் கணக்கில் விளையாடினர்.
இரண்டாம் சுற்றில் அதிரை (WFC) அணியினர் திருச்சி அணியினர் விறுவிறுப்பாக விளையாடி ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் திருச்சியை வீழ்த்தி அதிரை WFC அணியினர் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை WFC அனியினரும் அதிரை AFFA அனியினருக்கும் விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்றது
இதில் முதல் பகுதி நேர ஆட்டத்தில் அதிரை WFC அணியினை சார்ந்த சாதலி முதல் கோலை அடித்து விளையாடினார் இந்நிலையில் இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் சுறுசுறுப்பாக விளையாடினர் அனைவரின் எதிர்பார்பபை கடந்து இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்கள் அடிக்காமல் விளையாடினர் இறுதியில் அதிரை WFC அணியினர் (1-0) என்ற கோல் கணக்கில் ஆடி அறை இறுதி ஆட்டத்திற்க்கு தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது