குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிரையர்களின் பெரும்பாலானோர் ரமளான் முடிந்த பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் நீராட செல்வது வழக்கம்.
அந்த வகையில் இவ்வாண்டும் ஏராளமான அதிரையர்கள் தனியார் வாகனங்கள் மூலம் அங்கு செல்கின்றனர்.
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
காற்றுடன் கூடிய சாரல் மழை காரணமாக தென்காசி, செங்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் குளுமையான சூழல் நிலவிவருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. பிரதான அருவியில், வளைவையும் தாண்டி தண்ணீர் பேரிரைச்சலோடு கொட்டுகிறது.
வெள்ளப்பெருக்கு காரணமாக, குற்றால அருவிகளில், சுற்றுலா பயணிகள் நீராட காவல்துறையினர் தடை விதித்திருக்கின்றனர்.