தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவராக PJ அவர்கள் பல வருடங்கள் பணியாற்றியுள்ளார்.
இவர் பெண்ணுடன் பேசிய ஆடியோ வெளியான நிலையில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
TNTJவில் அதன்பின்னர்,மாநில நிர்வாகியாக அல்தாபி அவர்கள் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அவர் மீதும் தீடீர் குற்றசாற்றினால் அவருக்கும் TNTJ க்கும் முபாஹலா திருச்சியில் நடைபெற்றது.
இதில் பாதிவுடன் அல்தாபி அவர்கள் வெளியானர்.
இதனாலும் TNTJ உறுப்பினர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், TNTJவை சேர்ந்த PJ அவர்கள் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார்.
அக்கடிதத்தில், தன் இருதயம் பல்வேறு பொய் குற்றசாற்றுகளால் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதுவரை இரு முறை அட்டாக் வந்துள்ளது எனவும், இதனால் தான் TNTJவில் பொறுப்புகளை விட்டு விலகியதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று(12/05/2018)TNTJவின் உயர்நிலை குழு கூடியுள்ளது.
இந்த கூட்டத்தில் பிஜே அவர்களின் மீது புகார் வந்தது.
பிஜே அவர்களின் குற்றங்கள் நிரூபணமான நிலையில் அவரை இனி எந்த காலத்திலும் TNTJவின் எந்த பொறுப்பிற்கும் வரக்கூடாது என்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கங்கள் நோன்புக்கு பின்பு பொதுக்குழுவில் விளக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.