அதிரை எக்ஸ்பிரஸ்:- காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு காவேரி மேலாண்மை வாரியத்தை மீட்பதற்கு கடந்த 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திமுக தலைமையில் மற்றும் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தது.
இதையடுத்து, தமிழகத்திற்கே துரோகம் செய்த மத்திய அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்தும், நம் உரிமையை மீட்பதற்கும், உடனடியாக காவிரி மேலாண்மை அமைத்திட வலியுறுத்தியும் திராவிட முன்னேற்ற கழகதின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாபெரும் ‘காவிரி உரிமை மீட்புப் பயணம்’ தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக நாளை (08/04/18) மாலை சுமார் 5 மணியளவில் பட்டுகோட்டை வருகைதருகிறார் மு.க.ஸ்டாலின்.
இந்த நடைபயணத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.