Friday, April 26, 2024

ஆர்.எஸ்.எஸ் பயிற்சியில் தலித் சிறுவன் உயிரிழப்பு!

Share post:

Date:

- Advertisement -

திருச்சி மணிகண்டம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சிறுவன் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இளங்காகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவரது மகன் விஜய், திருச்சி மணிகண்டம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் முகாமில் பயிற்சி பெற்றுவந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விஜய் இளங்காகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பயிற்சிக்கிடையே கல்லூரியின் படிக்கட்டு பக்கவாட்டில் உள்ள கைப்பிடியில் விஜய் சறுக்கி விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது தவறிவிழுந்து காயமடைந்ததாக, திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் விஜய் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் விஜய் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார் என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

தலையில் அடிபட்டதில் விஜய் பலியானார் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தெரிவித்தனர். இதுகுறித்து விஜய்யின் தாயார் சரோஜா கொடுத்தப் புகாரின் பெயரில், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து மணிகண்டம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...