கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் 24வது வார்டில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அப்துல் மாலிக் களத்தில் 24வது வார்டும் 24 வாக்குறுதிகளும் என்ற கொள்கை முழக்கத்துடன் களம் இறங்கினார்.
இவர் பெற்ற வாக்குகள் 340 ஆகும் பெரும்பாலான வார்டு மக்கள் இவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர்.
இந்த நிலையில் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று நன்றி தெரிவிக்கும் மாலிக், வார்டின் மேம்பாடு சுகாதாரம், உள்ளிட்ட தேவைகளுக்கு என்னை தயங்காமல் அழைக்கலாம் என்றும் தமக்காக வாக்களித்த வாக்களிக்க கோரிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இது தவிர வார்டுகுட்பட்ட பகுதியை தவிர்த்து மருத்துவ தேவைகளுக்காக எந்நேரத்திலும் தம்மை தயங்காமல் அழைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
வித்தியாசமான நன்றி அறிவிப்பும் வீடுகளுக்ககே சென்று நிறை குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கும் மாலிக்கின் மகத்தான பணியை எதிர்கட்சியினரும் பாராட்டி வருகின்றனர்.