நாட்டின் 72வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்படுகிறது.
அந்த வகையில் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் 72வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி வளாகத்தில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் தமிழ்வாணன் தேசிய கொடி ஏற்றினார். இதில் பேரூராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.