தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனித நேய ஜனநாயக கட்சி கிளைத்தலைவர் ஹூமாயூன் கபீர் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.
மல்லிப்பட்டிணம் நடுநிலை பள்ளி,பள்ளிவாசல் சாலைக்கு இடையே பாலம் அமைத்தல்,மழைக்காலங்களில் கடைத்தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றிட மருதுபாண்டி நகரிலிருந்து நேவல் கட்டிடம் வரையில் வடிகால் அமைத்திட வேண்டும்,நேவல் கட்டிடத்திற்கு அருகே குப்பைகள் கிடக்கின்றன,அதனை அப்புறப்படுத்தி அந்த இடத்தை சுத்தம் செய்திட வேண்டும் மேலும் குடிநீரை மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கும் வீடுகளில் மோட்டாரை பறிமுதல் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மஜக கிளைத்தலைவர் ஹூமாயூன் கபீர் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னாவிடம் வழங்கினார்.இச்சந்திப்பில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாசிலாமணி,வார்டு உறுப்பினர் நூருல் ஹமீது மற்றும் ஊராட்சி செயலாளர் தெட்சிணா மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.