Friday, April 26, 2024

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தமானாஷ் கோஷ் கொரோனாவால் உயிரிழப்பு !

Share post:

Date:

- Advertisement -

இந்தியா முழுவதும் கொரோனாவின் உக்கிர தாண்டவம் ஆயிரக்கணக்கான உயிர்களை குடித்து வருகிறது. கொரோனாவுக்கு தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் பலியானார்.

இந்தியாவிலேயே கொரோனாவுக்கு பலியான முதல் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன். அவரது மரணம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோஷ்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தவர் கோஷ். அவரது மறைவு மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, 33 ஆண்டுகாலம் எங்களுடன் இருந்தவர். அர்ப்பணிப்புடனேயே கட்சிப் பணியையும் மக்கள் பணியையும் ஆற்றியவர். கோஷின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...