இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமான ரமலான் மாதம் முழுதும் நோன்பு நோற்று ஷவ்வால் முதல் பிறை அன்று நோன்பு பெருநாள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் ஷவ்வால் பிறை வெளிநாடுகளில் நேற்று தென்பட்டதை அடுத்து ஈதுல் ஃபித்ர் என்கிற நோன்பு பெருநாள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பஹ்ரைன் வாழ் அதிரையர்கள் 30 நாள் நோன்பு நோற்று இன்று ஞாயிற்றுக்கிழமை பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு புகைப்படம் எடுத்து நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.