தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது கொரோனா இல்லாத பகுதியாக அதிரை மாறியுள்ள நிலையில், இந்தியன் வங்கி(சேர்மன்வாடி), பிள்ளையார் கோவில் தெரு சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இன்று (18-05-2020) வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை ஆகியோரின் உத்தரவின் பேரில் அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் அகற்றினர்.
அப்போது அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.எஸ்.அன்பரசன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் திரு.செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.