மே 7 அன்று டாஸ்மாக் – மதுக்கடைகளைத் திறக்கும் முடிவைக் தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, நேற்று மே 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் 11.30 வரை தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் காண்-ஒலிக் கூடல் (Video Conference) மூலமாகவும், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வாயிலாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
“தமிழக அரசே,
மதுபானக் கடைகளைத் திறக்காதே! மக்களைக் கொல்லத் துணியாதே!
கொரோனா பரவச் செய்யாதே! குடிகெடுக்க முனையாதே! ” – என திருமாவளவன் கண்டன முழக்கங்களை காண்-ஒலிக் கூடல் மூலம் எழுப்ப விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் அவரவர் வீட்டு வாசலில் நின்று முழக்க அட்டைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டு ஓங்கிக் குரல்கொடுத்தனர்.
போரட்டத்தின் நிறைவில் தொல். திருமாவளவன் MP கண்டன உரையாற்றினார். கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் MP மற்றும் முன்னணி பொறுப்பாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 6, 2020