தஞ்சாவூர் மாவட்டம்; பேராவூரணியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் பெங்களூர்வில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பட்டுக்கோட்டை தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா எதிரொலி காரணத்தினால் இந்திய முழுவது 144 தடை அமலில் இருப்பதால் சந்திரமோகன் தனது மனைவியை அவர் பணிபுரியும் வங்கியில் காலை விட்டு மாலை அழைத்து செல்வது வழக்கம்.
இதே போல் தினமும் வந்து சென்றுகொண்டிருந்த சமூக ஆர்வலர் சந்திரமோகன். இரவு பகல் பார்க்காமல் பணி செய்யும் காவலர்கள், துப்புறவு பணியாளர்கள் ஆகியோருக்கு உதவி செய்யும் வகையில் அவர்களுக்கு தினமும் மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்ல வரும்பொழுது தண்ணீர், முறுக்கு, குளிர்பானங்கள் போன்றவை கடந்த சில வாரங்களாக கொடுத்து வருகின்றனர்.
இதனை நேரில் பார்க்கும் பலர் சமூக ஆர்வலர் சந்திரமோகனை பாரட்டிவருக்கின்றனர்.