அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பாக இன்று அதிரையில் 50 குடும்பங்களுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டது.
உலக நாடுகளெங்கும் கொரோனா வைரஸ் பெரும் துயரை ஏற்படுத்தி வரும் நிலையில் நமது மத்திய அரசானது அதனை தடுக்கும் வகையில் 21நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு பெருமளவில் சிரமப்படுகின்றனர்.
தற்பொழுது அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமத்தின் தலைவர் : U.நாகூர் கனி, து.தலைவர் : M.முகமது காசிம், செயலாளர் :SM.சாகுல் ஹமீது, பொருளார் : M.இக்பால், து.செயலாளர் : M. நஷீர் அகமது ஆகியோர் சார்பில் தங்களால் முடிந்த உதவிகளை அதிரை மக்களுக்காக உழைக்க ஆசைப்பட்டு உழைத்துக்கொண்டு இதேபோல் பல பணிகள் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றனர். எனவே இன்னும் அதிக அதிகமாக மக்களுக்கு பணிகள் செய்ய அனைவரும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.