சென்னையை அடுத்த தாம்பரத்தில் அனைத்து ஜமாத் மற்றும் தமுமுக சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு தாம்பரம் அனைத்து ஜமாத்தினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் தலைமை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு MP, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி MP, INTJ தலைவர் SM பாக்கர், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அய்யா தர்மயுக வழிப்பேரவை நிறுவனத்தலைவர் அய்யாவழி P. பாலமுருகன் ஆகியோர் பங்கேற்று CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினர்.
இப்பொதுக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பல்லாயிரகணக்கானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.