குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதிலும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக தங்கள் வகுப்புகளை புறக்கணித்து போராடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அனைத்து சமுதாய கூட்டமைப்புகள் சார்பாக நேற்று (14.02.2020) வெள்ளிகிழமை மாலை போராட்டம் நடைபெற்றது.
அமைதியான ஜனநாயக வழியில் போராடிக் கொண்டிருந்த மக்களை காவல்துறை கண்ணிமைக்கும் நேரத்தில் தடியடி நடத்தியது. இந்த தடியடியில் கைக்குழந்தைகளுடன் கலந்துக் கொண்ட பெண்களும் பாதிக்கப்பட்டனர்.
இதனை கண்டித்து இன்று மாலை 5 மணிக்கு பட்டுகோட்டை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பில் டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த முற்றுகை போராட்டத்திற்கு அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டார மக்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.