தமிழகத்தில் இஸ்லாமிய பாரம்பரியம் கொண்ட ஊர்களில் அதிரையும் ஒன்று.இளைஞர்கள் என்றால் விளையாட்டு,தேவையற்ற அரட்டைகள் என்று தான் பெரும்பாலான மக்களால் எண்ணப்படுகிறது.ஆனால் நமதூரை சார்ந்த இளைஞர்களை பொறுத்தவரை விளையாட்டிலும் சிறப்பாக இருந்தாலும் சமூக சேவைகளில்,பிறருக்கு உதவுவதிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்கள்.
நமதூரில் உள்ள இளைஞர்கள் விபத்தில் சிக்கி கொண்டவரை உடனடியாக மீட்டு அவருக்கான முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைகளில் சேர்ப்பது,இரத்தம் தேவைபடுவோர்களுக்கு உடனடியாக இரத்தம் கொடுப்பது,சாக்கடைகளை சுத்தம் செய்வது,நோய் தடுப்புக்கான நிலவேம்பு கசாயம்,தெருக்களை சுத்தப்படுத்துவது போன்ற அரும்பணிகளை தொடர்ந்து சிறப்பாக ஈடுபட்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.அவர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தாருக்கும் இறைவனிடம் நாம் ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்..
பிறர்நலன் நாடுவதே சிறந்தது என்று சொல்லக்கூடிய இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் தொடர்ந்து இது போன்ற பணிகளை அனைவரும் ஒன்றிணைந்து மேன்மேலும் செய்யவேண்டும்…..