பட்டுக்கோட்டை வட்டார மதசார்பற்ற ஜனநாயக கூட்டனியின் சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ் எஸ் பழனிமாணிக்கம் தலைமையில் பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது பல்வேறு கூட்டனி கட்சியினரின் கருத்துரைகள் பரிமாற்றம் செய்துக் கொள்ளப்பட்டது அப்போது பேசிய அதிரை நகர முன்னாள் சோமன் அஸ்லம்(அஸ்லம்), இஸ்லாமியர்கள் யாரும் பாஜகவுக்கு பயந்து திமுகவுக்கு வாக்களிக்கவில்லை எனவும், பல்வேறு அமைப்புகள் திமுகவுக்கு எதிரான பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும், அதிரை இல்லத்தரசிகள் இவ்விவகாரத்தில் மனைவிகள் கனவர்களின் பேச்சை மதிக்கமாட்டார்கள் எனவும், அவர்கள் திமுகவைத்தான் ஆதரிப்பார்கள் என கூறியுள்ளார்.
அவரின் இப்பேச்சு கூட்டனி கட்சியினரை முகம் சுழிக்க செய்துள்ளதாகவும் இடம் பொருள் பார்த்து பேசுவது நல்லது என சில மூத்த அரசியல் வாதிகள் தெரிவித்து வருகின்றனர்.