Friday, April 26, 2024

ஆவணியாபுரம் மாணவன் கொலையில் திடுக்கிடும் தகவல்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்த மும்தசர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அவரை கடத்தி சென்ற சிலர் 5 லட்ச ரூபாய் கேட்டு மும்தசரின் தாயை மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து, மும்தசரை போலீசார் தேடிவந்த நிலையில், திருபுவனம் வீரசோழன் ஆற்றிற்கு செல்லும் வழியில் மும்தசர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு புதரில் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இதையடுத்து, மும்தசரை கொலை செய்ததாக அவரது சக நண்பர்களான நியாஸ் அகமது, முகமது கலீல் மற்றும் சலீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காதல் பிரச்சினையால் இக்கொலை நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...