அதிரை நகரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மொத்தம் 3 கிளைகளாக செயல்பட்டு வருகிறது.
முன்னால் மாநில தலைவர்களான பிஜே மற்றும் அல்தாஃபி ஜமாஅத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது அதிரை நகர ததஜ கிளை 3 ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் அதிரை ததஜ கிளை 3 தற்காலிகமாக தாவா பணிகள் போன்றவற்றை நிறுத்தி வைப்பதாகவும், பிறை பார்க்கும் விஷயத்தில் மாறுபட்ட கருத்தைக் கூறி மார்க்க விஷயத்தில் ததஜ தலைமை கேலி செய்கிறது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொருளாதார விஷயத்தில் 120 சிறுவர்களுக்கான ஒரு ஆண்டு செலவு 60 லட்சம் ஆகும் போது, 6 கோடியே 67 லட்சம் செலவு என பொதுக்குழுவில் அறிவித்து, மீதமுள்ள அந்த 6 கோடிக்கு தெளிவான கணக்கு காட்டாமல் இருப்பதனாலும்,ததஜ தலைமை மேல் இருக்கும் கடும் அதிருப்தியினாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை நகர கிளை 3 தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதனுடைய பிரத்யேக (Exclusive) வீடியோ விரைவில்…