காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும் அதற்க்கு போதிய அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் அனைத்து கட்சி எடுத்த முடிவின்பிரகாரம் பந்த் அனுசரிக்கபட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பேருந்துகள் ஆங்காங்கே காவல் துறை உதவியுடன் இயக்கபட்டு வருகின்றது.
இந்நிலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி புறபட்ட தடம் எண் 14 என்ற பேருந்து வண்டிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது அப்போது வழிமறித்த போராட்ட காரர்கள் டயரின் காற்றை பிடுங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து நடத்துனர் அதிரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த காவலர்கள் பயணிகளை பாதுக்காப்பாக மாற்று ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்து உள்ளனர்.