தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட ஆப் இந்தியா மாணவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிரை பேருந்து நிலையத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாவாஜா தலைமையில் நடைபெற்றது.இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் ரியாஸ் அஹமது, SDPI கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் நிஜாமுத்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் CFIயின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பரோஸ் காண் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஹாவாஜா அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.