Tuesday, March 19, 2024

செய்தியாளரை தாக்கிய ஹெச்.ராஜாவின் சகோதரர்..!!

Share post:

Date:

- Advertisement -

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் சகோதரர், செய்தியாளரை தாக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 32 லட்சம் ரூபாயை அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநர் ராஜி, கும்பகோணம் மண்டலத்தில் தலைமைக் கணக்கு அதிகாரியாக இருந்த சுந்தர் உள்ளிட்ட 21 பேர் முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இதில், குற்றம்சாட்டப்பட்டவர்கள், திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சாந்தி முன்னிலையில், இன்று நேரில் ஆஜராகினர். இதில் சுந்தர், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த மார்ச் மாதம், ஓய்வுபெறும் தினத்திற்கு முதல்நாள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்ட வெளியே வந்த சுந்தரை படம்பிடித்த செய்தியாளர்களை, அவர் திடீரென தாக்கியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த அமீனா அவர்கள்..!!

கடற்கரை தெரு இடியப்பகார நிஷா வீட்டை சேர்ந்த மர்ஹும். அகமது அவர்களின்...

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்.. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன ? முழு விபரம் இதோ!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணியை இறுதி...

மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த பி.முஹம்மது சுபுஹானுத்தீன் அவர்கள்..!!

மர்ஹும்.மு.மு. முகைதீன் சேக்காதி, மர்ஹும் முகைதீன் பக்கீர் இவர்களின் பேரனும், மர்ஹும்...