வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு : குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள் !
இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க நாளான நாளை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். இந்தநிலையில் நாளை குடியரசுத் தலைவரின் உரையைப் புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், நாங்கள் 16 அரசியல் கட்சிகளிடமிருந்து அறிக்கையை வழங்குகிறோம். நாங்கள்