அதிரை புதுப்பள்ளியில் இன்று திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் புதுப்பள்ளி குளம் சுத்தகரிப்பு, நீர்நில, மற்றும் அதை சுற்றி வரக் கூடிய கழிவு நீர் தடுப்பு, அதை சுற்றி வேலி போன்றவைகள் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் மற்றும் குளத்தை சுற்றி முறையான ஆய்வுகள் நடைபெற்றது.
அதில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் எஸ். ஹெச். அஸ்லம், சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு தலைவர் அஹமது அனஸ், புதுப்பள்ளி செயலாளர் ஹிதாயத்துல்லா மற்றும் அபுல் கரீம், கஞ்சுல் முகமத், மு.ச.மு.யூசுப், நீர்நிலை பொருளாளர் ஜலீல், முகைதீன், கிஜார், சங்க மிடில் ஜோன் பொறுப்பாளர்கள், சங்க செயற்குழு உறுப்பினர் ஏ.ஜே. ஜியாவுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது :
1. புதுப்பள்ளி குளத்தை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கழிவு நீர் தடுப்பு, மற்றும் அதற்கான முறையான வடிகால் அமைப்பது.
2. குளத்தை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றுவது மற்றும் காற்றால் கொண்டு வரப்படும் குப்பைகள் குளத்திற்கு செல்லாமல் தடுப்பதற்கான வேலி அமைப்பது.
3. அந்த குளத்தை குற்றி குப்பை கூளங்கள் போடப்படுவதால், அதற்காக இரண்டு குப்பை தொட்டிகள் அதிரை மேம்பாட்டு அமைப்பு மூலம் வைப்பது என்பதாக தீர்மானிக்கப்பட்டது.
4. மேற்கூறப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட வேலைகளை சம்சுல் இஸ்லாம் சங்கம் மூலம் பேரூராட்சிக்கு மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.