Thursday, March 28, 2024

ஹாதியாவின் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்!!

Share post:

Date:

- Advertisement -

புதுடெல்லி(23 ஜன 2018): ஹாதியாவின் திருமண வாழ்க்கையில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கே.எம்.அசோகன் என்பவரது மகள் அகிலா இவர் முஸ்லிம் மதத்திற்கு மாறி ஹாதியா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். மேலும் ஷபின் ஜகான் என்பவரை திருமணமும் செய்துகொண்டார். ஆனால் லவ் ஜிஹாத் என்ற குற்றச்சாட்டை வைத்து கேரள உயர் நீதிமன்றம் இந்த திருமணத்தை ரத்து செய்தது. இதனை அடுத்து அவர் பெற்றோரின் கண்காணிப்பில் வீட்டுச் சிறையில் இருந்தார்.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஹாதியாவின் கணவர் ஷபின் ஜகான் கேரள நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கில் ஹாதியாவிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம் ஹாதியாவை பெற்றோரிடமிருந்து மீட்டு அவரது மருத்துவ படிப்பை தொடர ஒப்புதல் அளித்தது.

தற்போது கோவை சித்த மருத்துவ கல்லூரியில் கல்வியை தொடர்ந்து வருகிறார் ஹாதியா.

இந்நிலையில் ஹாதியாவின் வழக்கை மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹாதியாவி திருமண வாழ்க்கையில் தலையிட முடியாது என்று தெரிவித்து விட்டது. அது அவரது உரிமை என்றும், மேஜெர் பெண்ணான ஹாதியாவே அவரது திருமண வாழ்க்கை குறித்து முடிவெடுப்பார் என்றும் தெரிவித்துவிட்டது.

மேலும் கேரள நீதிமன்ற உத்தரவு குறித்து மட்டுமே விசாரணை மேற்கொள்ள முடியும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

என்.ஐ.ஏ.ஆவணங்கள் அடங்கிய கோப்பை ஹாதியாவின் தந்தை சார்பில் உச்ச நீதிமன்றாத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இவ்வழக்கின் மறு விசாரணை வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

source innearm

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...