Friday, April 19, 2024

தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்திய புதுச்சேரி அரசு!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் அரசுப் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை அரசு உயர்த்தியது. இந்த கட்டண உயர்வினால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

எதிர்க்கட்சிகளும் இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், தமிழக அரசு உயர்த்திய டிக்கெட் கட்டணத்திற்கு இணையாக கட்டணத்தை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்து, தமிழகத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு ஈ.சி.ஆர். வழியாக வரும் பேருந்து கட்டணம் 100 ரூபாயில் இருந்து 145 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பைபாஸ் வழியாக வரும் பேருந்துகளில் 140 ரூபாய் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன பேருந்து கட்டணம் 200 ரூபாயில் இருந்து 315 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுவை-காரைக்கால் டிக்கெட் கட்டணம் 80 ரூபாயில் இருந்து 120 ரூபாயாகவும், புதுவை-பெங்களூர் டிக்கெட் கட்டணம் 215 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும், புதுவை-திருப்பதி கட்டணம் 170 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...