Thursday, March 28, 2024

நாய் வண்டியில் எற அலைமோதும் மக்கள் கூட்டம்!

Share post:

Date:

- Advertisement -

 

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான இடங்களில் இன்றும் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில்  8ஆவது நாளாக  போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் ஏதும் ஓடவில்லை. எனவே பயணிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இதனால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் வழக்காக வாங்கும் கட்டணத்தை விட அதிகக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். ஆகவே மக்களுக்கு கூடுதல் செலவும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களை நாய் வண்டியில் ஏற்றிச் செல்கின்றனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கத்தில் இருந்து பயணிகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நாய் வண்டியில் அழைத்து செல்லப்படுகின்றனர். பொதுமக்கள் நாய் வண்டி என்றும் பாராமல், அதில் கட்டணம் கொடுத்து பயணம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் நாய் வண்டியில் அவசர அவசரமாக ஏறிச் செல்லும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதனை நெட்டிசன்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, “ இது மட்டும்தான் நடக்காமல் இருந்தது. அதுவும் இப்போது நடந்தேவிட்டது ” என வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...