Friday, April 19, 2024

இடைத்தரகர்களுக்கு தடை..!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்::- தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடைத்தரகர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகம் முழுக்க இருக்கும் சார் பதிவாளர் அலுவலங்கங்களில் பொதுவாக நிறைய இடைத்தரகர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் மூலமாக எளிதாக வேலை முடிந்துவிடும் என்பதால் மக்களும் இவர்களை அதிகம் அணுகுகிறார்கள்.

ஆனால் இதன் காரணமாக நிறைய லஞ்சமும், ஊழலும் நடக்கிறது. இதுகுறித்து புகார்களும் அடிக்கடி எழுந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் பதிவுத்துறை சார்பில் அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இனி சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சொத்து விற்பவர்கள், வாங்குபவர்களுக்கு மட்டுமே அலுவலகங்களில் அனுமதி அளிக்கப்படும். இந்த தடைச்சட்டம் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் இடைத்தரகர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் காவல் துறையினர் மூலம் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...