மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் போலீஸ் நாநா அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது அலியார் அவர்களின் சகலையும், மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்களின் மச்சானும், மர்ஹூம் ராஜிக் அஹமது, மௌலவி ஜாஹிர் ஹுசைன், ஹாஜா ஜய்னுத்தீன் ஆகியோரின் சாச்சாவும், ஜனுக் அஹமது அவர்களின் மாமனாரும், முஹம்மது அசாருதீன், மாஹிர் ஆகியோரின் அப்பாவும், மௌலவி ஹைதர் அலி அவர்களின் தகப்பனாருமாகிய ஈனா காகா என்கின்ற E.M. இபுராஹீம் அவர்கள் இன்று பகல் 12.00 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.30 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.