அதிரையில் 75 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நாளை (30.06.2022) வியாழக்கிழமை முதல் துவங்க உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடூர கொரோனாவின் பிடியில் தமிழக மக்கள் தவித்து வந்த வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்ததன் காரணத்தினால் இந்த வருடம் மீண்டும் அதிரையில் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் தலைமையில் நாளை முதல் துவங்கி 40 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் அதிரையர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.