அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற போட்டியில் BALU MEMORIAL திருச்சி – THENNARASU பள்ளத்தூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
போட்டியின் ஆரம்பத்திலிருந்தே திருச்சி அணி ஆதிக்கம் செலுத்தியது. திருச்சி அணியில் ஆதிக்கத்தை தன் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பதபதைத்த பள்ளத்தூர் அணிக்கு எதிர்பாரா விதமாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் அடித்தது.
இருப்பினும், தொடர்ந்து தனது சாமர்த்தியமான ஆட்டத்தினால் திருச்சி அணி அடுத்தடுத்து கோல் மழைகளை பொழிந்தது.
இறுதியாக திருச்சி அணி 3 – 1 என்கிற கோல் கணக்கில் பள்ளத்தூர் அணியை வீழ்த்தியது.
நாளைய தினம் இளையாங்குடி – காரைக்கால் அணிகள் மோத உள்ளனர்