தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் மல்லிப்பட்டிணம் டால்பின் பீச் சுற்றுலா கடற்கரையை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கொரோனா ஊரடங்கினால் முடங்கி போன பொதுமக்கள் மாலைநேரங்களில் சுற்றுலா பகுதிகள்,கடற்கரைகளுக்கு செல்லும் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் உள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலே துறைமுகம் கொண்டுள்ள மல்லிப்பட்டிணத்தில் உள்ள கடற்கரையை பார்க்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை மாலை நேரங்களில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இதனையடுத்து அதிகாரிகள் பார்வையிட்டு மல்லிப்பட்டிணம் டால்பின் பீச்சை பார்வையிட்டு சென்றனர்.