அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் இன்று துவங்கியது.
இந்த முதல் நாள் போட்டியில் கலைவாணர் 7’s கண்டனூர் – டால்ஃபின் FC மதுரை அணிகள் களம் கண்டன.
அதிரையில் வெற்றிக் கோப்பையை பல முறை தன்வசப்படுத்தி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் பலம் வாய்ந்த கண்டனூர் அணியை ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே முதல் கோல் அடித்து ஆட்டம் காண வைத்தது மதுரை.
சளைக்காமல் தொடர்ந்து முன்னேறிய கண்டனூர் அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து முன்னிலை பெற்றது.
முதல் பகுதி நேர ஆட்ட முடிவிலிருந்தே முன்னிலை பெற்ற கண்டனூர் தொடர்ந்து மேலும் 2 கோல்களை அடித்து 4 – 2 என்கிற கோல் கணக்கில் தனது வெற்றிக்கணக்கை துவங்கியுள்ளது.
நாளைய தினம் தஞ்சாவூர் – காரைக்குடி அணிகள் மோதுகின்றன.